English translation of T. V. Kapali Sastry's commentary on Vasishtha Ganapati Muni's Sat-darshana - sanskrit version of Sri Ramana's 'Ulladu Narpadu' in Tamil.
T. V. Kapali Sastry's Sat-Darshana Bhashya (commentary) on Vasishtha Ganapati Muni's सद्दर्शनम् - a Sanskrit version of Sri Ramana's 'Ulladu Narpadu' in Tamil
பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷிகள் அருளிய உள்ளது நாற்பது மங்கலம் வெண்பா உள்ளதல துள்ளவுணர் வுள்ளதோ வுள்ளபொரு ஹள்ளலற வுள்ளத்தே யுள்ளதா-லுள்ளமெனு முள்ளபொரு ளுள்ளலெவ னுள்ளத்தே யுள்ளபடி புள்ளதே யுள்ள லுணர். மரணபய மிக்குளவம் மக்களர ணாக மரணபவ மில்லா மகேசன் -சரணமே சார்வர்தஞ் சார்வொடுதாஞ் சாவுற்றார் சாவெண்ணஞ் பார்வரோ சாவா தவர். பத்தர்சனத்தின் மூல கிரந்த மிது. 370 உள்ளது நாற்பது நூல் 1. நாமுலகங் காண்டலா னானாவாஞ் சத்தியுள வோர்முதலை யொப்ப லொருதலையே-நாமவுருச் சித்திரமும் பார்ப்பானுஞ் சேர்படமு மாரொளியு மத்தனையுந் தானா மவன். 2. மும்முதலை யெம்மதமு முற்கொள்ளு மோர்முதலே மும்முதலாய் நிற்குமென்று மும்முதலு-மும்முதலே யென்னலகங் கார மிருக்குமட்டே யான்கெட்டுத் தன்னிலையி னிற்ற றலை. 3. உலகுமெய் பொய்த் தோற்ற முலகறிவா மன்றென் றுலகுசுக மன்றென் றுரைத்தெ-னுலகுவிட்டுத் தன்னையோர்ந் தொன்றிரண்டு தானற்று நானற்ற வந்நிலையெல் லார்க்குமொப் பாம். 4. உருவந்தா னாயி னுலகுபர மற்றா முருவந்தா னன்றே லுவற்றி-னுருவத்தைக் கண்ணுறுதல் யாவனெவன் கண்ணலாற் காட்சியுண்டோ கண்ணதுதா னந்தமிலாக் கண். 5. உடல்பஞ்ச கோச வுருவதனா லைந்து முடலென்னுஞ் சொல்லி லொடுங்குமுடலன்றி யுண்டோ வுலக முடல்விட் டுலகத்தைக் கண்டா ருளரோ கழறு. 6. உலகைம் புலன்க ளுருவேறன் றவ்வைம் புலனைம் பொறிக்குப் புலனாமுலகைமன மொன்றைம் பொறிவாயா லோர்ந்திடுத லோர்ந்திடுத லான்மனத்தை யன்றியுல குண்டோ வறை. 7. உலகறிவு மொன்றா யுதித்தொடுங்கு மேனு முலகறிவு தன்னா லொளிரு-முலகறிவு தோன்றிமறை தற்கிடனாய்த் தோன்றிமறை யாதொளிரும் பூன்றமா மஃதே பொருள். 8. எப்பெயரிட் டெவ்வுருவி லேத்தினுமார் பேருருவி லப்பொருளைக் காண்வழிய தாயினுமம்-மெய்ப்பொருளி னுண்மையிற்ற னுண்மையினை யோர்ந்தொடுங்கி யொன் [றுதலே யுண்மையிற் காண லுணர். உள்ளது நாற்பது 371 9. இரட்டைகண் முப்புடிக ளென்றுமொன்று பற்றி யிருப்பவா மவ்வொன்றே தென்றுகருத்தினுட் கண்டாற் கழலுமவை கண்டவ ரேயுண்மை கண்டார் கலங்காரே காண். 10. அறியாமை விட்டறிவின் றாமறிவு விட்டவ் வறியாமை யின்றாகு மந்த-வறிவு மறியா மையுமார்க்கென் றம்முதலாந் தன்னை யறியு மறிவே யறிவு. 11. அறிவுறுந் தன்னை யறியா தயலை யறிவ தறியாமையன்றி-யறிவோ வறிவயற் காதாரத் தன்னை யறிய வறிவறி யாமை யறும். 12. அறிவறி யாமையு மற்றதறி வாமே யறியும் துண்மையறி வாகா-தறிதற் கறிவித்தற் கன்னியமின் றாயவிர்வ தாற்றா னறிவாகும் பாழன் றறி. 13. ஞனமாந் தானேமெய் நானாவா ஞானமஞ் ஞானமாம் பொய்யாமஞ் ஞானமுமே-ஞானமாந் தன்னையன்றி யின்றணிக டாம்பலவும் பொய்மெய்யாம் பொன்னையன்றி யுண்டோ புகல் . 14. தன்மையுண்டேன் முன்னிலைப் டர்க்கைக டாமுளவாந் தன்மையி னுண்மையைத் தானாய்ந்து-தன்மையறின் முன்னிலைப் டர்க்கை முடிவுற்றொன் றாயொளிருந் தன்மையே தன்னிலைமை தான். 15. நிகழ்வினைப் பற்றி யிறப்பெதிர்வு நிற்ப நிகழ்கா லவையு நிகழ்வே நிகழ்வொன்றே யின்றுண்மை தேரா திறப்பெதிர்வு தேரவுன லொன்றின்றி யெண்ண வுனல் . 16. நாமன்றி நாளேது நாடேது நாடுங்கா னாமுடம்பே னாணாட்டு ணாம்படுவ-நாமுடம்போ நாமின்றன் றென்றுமொன்று நாடிங்கங் கெங்குமொன்றா னாமுண்டு நாணாடி னாம். 372 உள்ளது நாற்பது 17. உடனானே தன்னை யுணரார்க் குணர்ந்தார்க் குடலளவே நான்ற னுணரார்க்-குடலுள்ளே தன்னுணர்ந்தார்க் கெல்லையறத் தானொளிரு நானிதுவே யின்னவர்தம் பேதமென வெண். 18. உலகுண்மை யாகு முணர்வில்லார்க் குள்ளார்க் குலகளவா முண்மை யுணரார்க்குலகினுக் காதார மாயுருவற் றாருமுணர்ந் தாருண்மை யீதாகும் பேதமிவர்க் கெண். 19. விதிமதி மூல விவேக மிலார்க்கே விதிமதி வெல்லும் விவாதம் விதிமதிகட் கோர்முதலாந் தன்னை யுணர்ந்தா ரவைதணந்தார் சார்வரோ பின்னுமவை சாற்று. 20. காணுந் தனைவிட்டுத் தான்கடவு ளைக்காணல் காணு மனோமயமாங் காட்சிதனைக்காணுமவன் றான்கடவுள் கண்டானாந் தன்முதலைக் தான் முதல் போய்த் தான்கடவு ளன்றியில தால். காண 21. தன்னைத்தான் றலைவன் றனைக்காண (னைத்தான் லென்னும்பன் னூலுண்மை யென்னையெனின் றன் காணலெவன் றானொன்றாற் காணவொணா தேற்றலைவற் காணலெவ னூணாதல் காண். 22. மதிக்கொளி தந்தம் மதிக்கு ளொளிரு மதியினை யுள்ளே மடக்கிப் பதியிற் பதித்திடுத லன்றிப் பதியை மதியான் மதித்திடுத லெங்ஙன் மதி. 23. நானென்றித் தேக நவிலா துறக்கத்து நானின்றென் றாரு நவில்வதிலைநானொன் றெழுந்தபி னெல்லா மெழுமிந்த நானெங் கெழுமென்று நுண்மதியா லெண். 24. சடவுடனா னென்னாது சச்சித் துதியா துடலளவா நானொன் றுதிக்கு-மிடையிலிது சிச்சடக்கி ரந்திபந்தஞ் சீவனுட்ப மெய்யகந்தை யிச்சமு சாரமன மெண். உள்ளது நாற்பது 373 25. உருப்பற்றி யுண்டா முருப்பற்றி நிற்கு முருப்பற்றி யுண்டுமிக வோங்குமுருவிட் டுருப்பற்றுந் தேடினா லோட்டம் பிடிக்கு முருவற்ற பேயகந்தை யோர். 26. அகந்தை யுண் டாயி னனைத்துமுண் டாகு மகந்தையின் றேலின் றனைத்து-மகந்தையே யாவுமா மாதலால் யாதிதென்று நாடலே யோவுதல் யாவுமென வோர். 27. நானுதியா துள்ளநிலை நாமதுவா யுள்ள நிலை நானுதிக்குந் தானமதை நாடாம-னானுதியாத் தன்னிழப்பைச் சார்வதெவன் சாராமற் றானதுவாந் தன்னிலையி னிற்பதெவன் சாற்று. 28. எழும்பு மகந்தை யெழுமிடத்தை நீரில் விழுந்த பொருள்காண வேண்டி-முழுகுதல்போற் கூர்ந்தமதி யாற்பேச்சு மூச்சடக்கிக் கொண்டுள்ளே யாழ்ந்தறிய வேண்டு மறி. 29. நானென்று வாயா னவிலாதுள் ளாழ்மனத்தா னானென்றெங் குந்துமென நாடுதலே-ஞானநெறி யாமன்றி யன்றிதுநா னாமதுவென் றுன்னறுணை யாமதுவி சாரமா மா ? 30. நானா ரெனமனமுண் ணாடியுள நண்ணவே நானா மவன்றலை நாணமுறநானானாத் தோன்றுமொன்று தானாகத் தோன்றினுநா னன்று பொருள் பூன்றமது தானாம் பொருள். 31. தன்னை யழித்தெழுந்த தன்மயா னந்தருக் கென்னை யுளதொன் றியற்றுதற்குத்தன்னையலா தன்னிய மொன்று மறியா ரவர் நிலைமை யின்னதென் றுன்ன லெவன். 32. அது நீயென் றம்மறைக ளார்த்திடவுந் தன்னை யெதுவென்று தான்றேர்ந் திராஅ-தது நா னிதுவன்றென் றெண்ணலுர னின்மையினா லென்று மதுவேதா னாயமர்வ தால். 374 உள்ளது நாற்பது 33. 34. 35. 36. என்னைய றியேனா னென்னை யறிந்தேனா னென்ன னகைப்புக் கிடனாகு-மென்னை தனைவிடய மாக்கவிருதானுண்டோ வொன்றா யனைவரனு பூதியுண்மை யால். என்று மெவர்க்கு மியல்பா யுளபொருளை யொன்று முளத்து ளுணர்ந்து நிலைநின்றிடா துண்டின் றுருவருவென் றொன்றிரண் டன்றென்றே சண்டையிடன் மாயைச் சழக்கு. சித்தமா யுள்பொருளைத் தேர்ந்திருத்தல் சித்திபிற சித்தியெலாஞ் சொப்பனமார், சித்திகளே-நித்திரைவிட் டோர்ந்தா லவைமெய்யோ வுண்மைநிலை நின்றுபொய்ம்மை தீர்ந்தார் தியங்குவரோ தேர். நாமுடலென் றெண்ணினல நாமதுவென்றெண்ணுமது நாமதுவா நிற்பதற்கு நற்றுணையே-யாமென்று நாமதுவென் றெண்ணுவதே னான்மனித னென்றெணுமோ நாமதுவா நிற்குமத னால். சாதகத்தி லேதுவிதஞ் சாத்தியத்தி லத்துவித மோதுகின்ற வாதமது முண்மையல-வாதரவாய்த் தான்றேடுங் காலுந் தனையடைந்த காலத்துந் தான்றசம னன்றியார் தான். வினைமுதனா மாயின் விளைபயன் றுய்ப்போம் வினைமுதலா ரென்று வினவித்-தனையறியக் கர்த்தத் துவம்போய்க் கருமமூன் றுங்கழலு நித்தமா முத்தி நிலை. பத்தனா னென்னுமட்டே பந்தமுத்தி சிந்தனைகள் பத்தனா ரென்றுதன்னைப் பார்க்குங்காற்-சித்தமாய் நித்தமுத்தன் றானிற்க நிற்காதேற் பந்தசிந்தை முத்திசிந்தை முன்னிற்கு மோ. உருவ மருவ முருவருவ மூன்றா முறுமுத்தி யென்னி லுரைப்ப-னுருவ மருவ முருவருவ மாயு மகந்தை யுருவழிதன் முத்தி யுணர். 37. 38. 39. 40. உள்ளது நாற்பது முற்றிற்று.
Home
Disciples
T V Kapali Sastry
Books
Share your feedback. Help us improve. Or ask a question.